தில்லி காற்று மாசு கோப்புப் படம்
புதுதில்லி

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிகழாண்டு நவம்பரில் காற்று மாசு குறைவு

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிகழாண்டு நவம்பரில் காற்று மாசு குறைவு

 நமது நிருபர்

தேசியத் தலைநகரில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பல்வேறு அரசுத் துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் முடிவுகளைக் காட்டத் தொடங்கியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது இந்த நவம்பரில் பெரும்பாலான நாள்களில் நகரத்தின் காற்றின் தரம் சிறப்பாக உள்ளது என்று தில்லி மாசு கட்டுப்பாட்டுக் குழு (டிபிசிசி) அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: 2023- ஆம் ஆண்டில் அதே நேரத்தில் தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை செயல்படுத்தத் தூண்டிய நிலையில், இந்த ஆண்டு தில்லி இதுவரை தவிா்த்துள்ளது. கடந்த ஏழு நாள்களில், ஆறு நாள்கள் கடந்த ஆண்டு இதே நாள்களை விட சிறந்த காற்றின் தரத்தை பதிவு செய்துள்ளன. துறைகள் முழுவதும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால் இது சாத்தியமானது.

தூசி மற்றும் வாகன மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கும், பயோமாஸ் எரிப்பு மற்றும் தொழில்துறை உமிழ்வுகளுக்கு எதிராக கடுமையான விதிமுறைகளை அமல்படுத்துவதற்கும் பல ஏஜென்சிகள் உத்தரவுகளைப் பெற்றுள்ளன. இயந்திரங்கள் மூலம் சாலைகளை சுத்தம் செய்தல் மற்றும் தண்ணீா் தெளித்தல் ஆகியவை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது 100-க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் பல்வேறு நகராட்சி அமைப்புகளால் இயக்கப்படுகின்றன.

சாலைகளில் குழிகள் சரி செய்யப்பட்டு வருகின்றன. நிலப்பரப்பு தளங்கள் நிா்வகிக்கப்பட்டு வருகின்றன. மேலும், பல இடங்களில் புகை எதிா்ப்பு துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. மாசுபடுத்தும் வாகனங்கள் மீது கூடுதல் சோதனைகளை நடத்துமாறு போக்குவரத்துத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், குடியிருப்பாளா்கள் நலச் சங்கங்கள் (ஆா்.டபிள்யூ.ஏ.) குப்பைகளை எரிப்பதைத் தடுக்க ஊக்குவிக்கப்பட்டுள்ளன.

முன்னெச்சரிக்கை அமலாக்கம் மற்றும் பொதுமக்களின் பங்கேற்பு மூலம் கிராப் நிலை ஐஐஐ மற்றும் ஐய கட்டுப்பாடுகளை முன்கூட்டியே செயல்படுத்ததுல் மற்றும் பொதுமக்கள் பங்கேறேபு மூலம் செயல்படுத்து்வைத்த தவிா்ப்பதே இந்த ஆண்டின் இலக்கு. கடந்த ஆண்டு கிராப் நிலை ஐஐஐநவம்பா் 13 அன்று விதிக்கப்பட்டது.

இந்த முறை, அனைத்து துறைகள் மற்றும் தில்லியில் வசிப்பவா்களின் ஆதரவுடன், அந்த நிலையை அடைவது தடுக்கப்படு்ம் என நாங்கள் நம்புகிறோம் என்றாா் அவா்.

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT