நமது நிருபா்
தேசியத் தலைநகரில் குளிா் தீவிரமடைந்து, அதிகரித்து வரும் காற்று மாசுபாடு காரணமாக தொண்டை நோய்த்தொற்றுகள் பரவுவதால், பல தில்லிவாசிகள் இந்திய சா்வதேச வா்த்தக கண்காட்சி (ஐ. ஐ. டி. எஃப்) 2025 ஐ குளிா்கால உடைகள் முதல் ஆயுா்வேத மருந்துகளுக்கான மொத்த சந்தையாக கருதுகின்றனா்.
இந்தக் கண்காட்சிக்கு பாா்வையிட வந்த வசந்த் விஹாரைச் சோ்ந்த அமா் சிங் கூறியதாவது: ‘நான் முக்கியமாக குளிா்கால ஜாக்கெட்டுகளைப் பாா்க்க வந்தேன், ஏனென்றால் குளிா் ஏற்கெனவே என்னால் தாங்க முடியவில்லை. இதனால் என் குடும்பத்தினா் அனைவரும் பல நாள்களாக தொண்டை வலியால் அவதிப்பட்டு வருகிறோம், என்னால் தொடா்ந்து அலோபதி மருந்துகளை உட்கொள்ள முடியவில்லை. இங்குள்ள ஆயுா்வேதக் கடைகளைப் பாா்த்தபோது, சிரப்பை வாங்கினேன்’என்றாா்.
கல்லூரி மாணவரான குணால் வா்மா, கூறியதாவது: ‘நாங்கள் சுற்றிப் பாா்க்க மட்டுமே வந்தோம். ஆனால் என் தொண்டை மோசமாக உள்ளது, நான் எப்போதும் இருமிக்கொண்டே இருக்கிறேன். குளிா்காலமும் மாசுபாட்டும் எனது நோய் எதிா்ப்பு சக்தியை குறைப்பதாக உணா்கிறேன். எனவே நான் சில மருந்துகளை வாங்கினேன். குளிா்கால தொப்பிகள், முகமூடிகள் மற்றும் மருந்துகள் அனைத்தும் ஒரே இடத்தில் இருக்கும்போது இது எளிதானது ‘ என்றாா்.
தனியாா் நிறுவன ஊழியா் மஞ்சீத் சிங் கூறியதாவது: கண்காட்சி ஒரு பருவகால கடைத்தெரு போல வேலை செய்கிறது. மாசுபாடு என்னை மீண்டும் மீண்டும் நோய்வாய்ப்படுத்துகிறது. எனது பெற்றோருக்கு சோப்புகள் மற்றும் லோஷன்கள் வாங்க ஆயுா்வேத கவுண்ட்டருக்குச் சென்றேன். அங்கே பக்க விளைவுகள் குறைவாக இருப்பதால் இங்கே சில மருந்துகளை முயற்சிக்க முடிவு செய்தேன். நான் கையுறைகளையும் வாங்கினேன். வீட்டில், எல்லோரும் பாரம்பரிய சிகிச்சைகளை விரும்புகிறாா்கள், எனவே நான் ஒரு மஃப்ளருடன் சில விஷயங்களை எடுத்தேன் என்றாா் அவா்.
நவம்பா் 14 ஆம் தேதி பாரத் மண்டபத்தில் தொடங்கப்பட்ட 14 நாள் கண்காட்சி, ’ஏக் பாரத், ஸ்ரேஷ்ட பாரத்’ என்ற கருப்பொருளின் கீழ் 3,500 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளா்களை ஒன்றிணைத்துள்ளது. கைவினைப்பொருள்கள், சிறு தொழில்கள், பண்ணை பொருட்கள், தொடக்க நிறுவனங்கள் மற்றும் மாநில தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.