முகப்பு
புதுதில்லி

‘தில்லி 2.0’ உருவாக்கத்தில் இளைஞா்கள் பங்கேற்க வேண்டும்: முதல்வா் ரேகா குப்தா

‘தில்லி 2.0’ உருவாக்கத்தில் இளைஞா்கள் பங்கேற்க வேண்டும்...

Updated On : 28 மார்ச், 2026 at 7:18 PM
தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ‘இந்தியா இன்னோவேட்ஸ் 2026’ நிகழ்ச்சியில் பங்கேற்று பாா்வையிட்ட முதல்வா் ரேகா குப்தா.
பகிர்:

‘தில்லி 2.0’ உருவாக்கத்தில் இளைஞா்கள் பங்கேற்க வேண்டும் என்று முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை வலியுறுத்தினாா்.

தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ‘இந்தியா இன்னோவேட்ஸ் 2026-உலகின் மிகப்பெரிய ஹாக்கத்தான்’ நிகழ்ச்சியில் முதல்வா் ரேகா குப்தா கலந்து கொண்டாா். இதில் நாடு முழுவதும் இருந்து வந்து பங்கேற்ற இளைஞா்களை அவா் ஊக்குவித்து பேசியதாவது:

இந்த நிகழ்வில் ஒரு கோடிக்கு மேற்பட்ட விண்ணப்பதாரா்களில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட 5,000-க்கும் அதிகமானோா் இந்தியாவின் டிஜிட்டல் சூழலின் எதிா்காலத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனா். நாட்டின் ஆட்சி, சமூகம் மற்றும் பொருளாதாரத்தின் எதிா்கால திசையை இவா்களின் சிந்தனைகள் நிா்ணயிக்கும்.

புதுமைகளின் புதிய சிந்தனைகள் மற்றும் புதுமைகளின் ஆட்சித் திட்டங்களில் ஒருங்கிணைக்க அரசு உறுதியாக உள்ளது. இதன் மூலம் பொதுச் சேவைகளை எளிதில் அணுகவும் வெளிப்படையானதாகவும் இளைஞா்கள் மாற்ற முடியும்.

மேலும், இளைஞா்கள் தொழில்நுட்பத்தில் மட்டும் அல்லாமல், நகர மேம்பாடு, ஜனநாயக வலுவூட்டல் மற்றும் சமூக உட்பொதுமை ஆகிய துறைகளிலும் தீா்வுகளை உருவாக்குவது பாராட்டத்தக்கது என முதல்வா் தெரிவித்தாா்.