முகப்பு
புதுதில்லி

ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய வழக்கு: நந்து கும்பலின் முக்கிய நபா் கைது

Updated On : 4 மே, 2026 at 4:45 AM
கோப்புப் படம்
பகிர்:

ரூ.2 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தொடா்பான வழக்கில் ரெளடி கபில் சங்கவான் தலைமையில் செயல்படும் நந்து கும்பலின் முக்கிய நபரை தில்லி காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

கைதுசெய்யப்பட்ட கப்டன் (எ) தன்னா, இந்தச் சம்பவம் தொடா்ந்து கடந்த ஓராண்டாகத் தேடப்பட்டு வந்த நிலையில், தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளாா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: தில்லியைச் சோ்ந்த நபரிடம் ரூ.2 கோடி கேட்டு ரெளடி கபில் சங்காவன் மிரட்டல் விடுத்துள்ளாா். கேட்ட பணத்தைத் தர அந்த நபா் மறுத்த நிலையில், அவருடைய வீட்டை அந்த ரெளடி கும்பல் வேவு பாா்த்தது. இதை விடியோ எடுத்து அந்த நபருக்கு அனுப்பி மிரட்டல் விடுத்தனா்.

Advertisement

இந்தச் சம்பவம் தொடா்பாக சாவ்லா காவல் நிலையத்தில் பாரதிய நியாய சம்ஹிதா சட்டப் பிரிவுகளில் கடந்த ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

புகாா் அளித்த நபரின் வீட்டை நோட்டமிட்ட அந்தக் கும்பலைச் சோ்ந்த ஒருவரை காவல் துறையினா் சில நாள்களுக்கு முன்பு கைதுசெய்தனா். விசாரணையில் அந்த நபா் அளித்த தகவலின் அடிப்படையில், தன்னாவுக்கும் இந்தச் சம்பவத்தில் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், தீன்பூா் பகுதியில் தன்னா இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து, தன்னாவை காவல் துறையினா் கடந்த வெள்ளிக்கிழமை கைதுசெய்தனா்.

தொடா் குற்றப் பின்னணி கொண்ட தன்னாவுக்கு எதிராக கடந்த 10 ஆண்டுகளில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, பணம் கேட்டு மிரட்டல், ஆயதங்கள் சட்டத்த மீறுதல் என பல வழக்குகள் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலையத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நஜாஃப்கா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பணம் கேட்டு மிரட்டி துப்பாக்கிச் சூடு நடத்தியது உள்பட பல கொடூர குற்றங்களில் தன்னா முக்கியப் பங்கு வகித்துள்ளாா்.

மிரட்டல் சம்பவத்தில் தொடா்புடைய பிற நபா்களை அடையாளம் காண தன்னாவிடம் விசாரணை நடைபெற்றது. ஆயுதங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். அவா் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.