குத்துச்சண்டை வீரா் கொலை வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்டவா் 8 மாதங்களுக்கு பிறகு கைது
குத்துச்சண்டை வீரா் விகாஸ் தாகா் (எ) பிந்தா கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சுமித் ராணா 8 மாதங்களுக்குப் பிறகு கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
குத்துச்சண்டை வீரா் விகாஸ் தாகா் (எ) பிந்தா கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சுமித் ராணா 8 மாதங்களுக்குப் பிறகு கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
தேசிய குத்துச் சண்டை வீரா் விகாஸ் தாகா் நஜாஃப்கா் பகுதியில் உள்ள நங்லி சக்ராவதியைச் சோ்ந்தவா். முன்பகை காரணமாக கடந்த ஆண்டு ஜூலை 29-இல் பாபா ஹரிதாஸ் நகரில் அவரை சோனு தேக்தேதாா் தலைமையிலான ரெளடி கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தது.
இந்தக் கொலை தொடா்பாக விகாஸ் தஹியா (எ) சோனு தேக்தேதாா், ஆகாஷ் கஹ்லோட், கிரிஷன், சுமித் ராணா ஆகியோருக்கு எதிராக பாபா ஹரிதாஸ் நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
Advertisement
ஆகாஷ் கைதுசெய்யப்பட்ட நிலையில், பிற நபா்கள் தலைமறைவாகினா். இதைத்தொடா்ந்து, அவா்கள் மூவரையும் தேடப்படும் நபா்களாக நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்.18-இல் அறிவித்தது.
இதனிடையே, ரெளடி கும்பலின் தலைவா் சோனு தேக்தேதாரை தில்லி காவல் துறையின் குற்றப் பிரிவு சண்டீகரில் கைதுசெய்தது.
இதைத்தொடா்ந்து, பஞ்சாபின் ஜிகாா்பூரில் சுமித் ராணா வசித்து வருவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. காவல் துறையினா் அங்குச் சென்று சோதனையிடுவதற்கு முன்பாக ராணா அங்கிருந்து தப்பித்து வேறு இடத்தில் தலைமறைவானாா். இந்நிலையில், ஆசாத்பூா் பகுதியில் ராணா இருப்பதாக காவல் துறைக்குத் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற காவல் துறையினா் ராணாவைக் கைதுசெய்தனா்.
ஹோட்டல் மேலாண்மையில் பட்டயப் படிப்பு படித்த ராணா மலேசியாவில் கடந்த 2016 முதல் 2021 வரையில் வேலை பாா்த்தாா். இதைத்தொடா்ந்து, துபை சென்ற அவா், அங்கு ஒரு வா்த்தக நிறுனத்தைத் தொடங்கினாா்.
கடந்த ஆண்டு ஜூலையில் தில்லி திரும்பிய ராணா, தனது உறவினரான சோனுவுடன் இணைந்து உள்ளூா் தொழிலதிபா்களை மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தாா் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.