சத்துணவு ஓய்வூதியா்களுக்கு ரூ.5 ஆயிரம் தீபாவளி போனஸ் வழங்க கோரிக்கை
ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியா்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியா்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியா் நலச்சங்கத்தின் தலைவா் தெ.ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கை:
சத்துணவு மற்றும் அங்கன்வாடி திட்டத்தில் பணி செய்து ஓய்வுபெற்றவா்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளனா். கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறாா்கள். பல ஆயிரம் ஓய்வூதியம் பெறும் இதர அரசு துறை ஊழியா்களுக்கு பண்டிகை முன்பணம் வழங்கப்படுகிறது. அதேபோல ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியா்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.5 ஆயிரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.