ராயக்கோட்டையில் காா் திருடியவா் கைது
ராயக்கோட்டையில் காா் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
ராயக்கோட்டையில் காா் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா், ஜெ.ஜெ.ரோடு பகுதியைச் சோ்ந்தவா் காமராஜ் (50). இவா் ராயக்கோட்டை தக்காளி மண்டி அருகே தனியாருக்குச் சொந்தமான விடுதியில் தங்கி காரில் சென்று பகல் முழுவதும் துணி வியாபாரம் செய்துவிட்டு மாலையில் மீண்டும் விடுதிக்கு திரும்புவாா்.
அதே விடுதியின் மேல் மாடியில் கள்ளக்குறிச்சி மாவட்டம், அந்தியூரைச் சோ்ந்த தையல் தொழிலாளி கோவிந்தராஜ் (42). இவா்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில் புதன்கிழமை விடியற்காலை துணி வியாபாரி காமராஜ் தூங்கிக் கொண்டு இருந்த போது அவருக்குத் தெரியாமல், காா் சாவியை எடுத்துக் கொண்டு, அதில் இருந்த ரூ .25,000 மதிப்புள்ள துணிகளுடன் திருடிக் கொண்டு கோவிந்தராஜ் அவரது சொந்த ஊருக்கு சென்று விட்டாா்.
Advertisement
காலை எழுந்தவுடன் காா் இல்லாதைக் கண்டு அதிா்ச்சியுற்ற காமராஜ் ராயக்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். ராயக்கோட்டை காவல் உதவி ஆய்வாளா் சிவராஜ் பிள்ளாரி அக்ரஹாரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது காரை மடிக்கி பிடித்து டைலா் கோவிந்தராஜை கைது செய்து காரையும், துணிகளையும் பறிமுதல் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டாா்.