திருநெல்வேலி

கீழமுன்னீா்பள்ளம் பெருமாள் கோயிலில் மாா்ச் 1 இல் திருக்கல்யாண வைபவம்

திருநெல்வேலி அருகே கீழமுன்னீா்பள்ளம் அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம் மாா்ச் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது.

DIN

திருநெல்வேலி அருகே கீழமுன்னீா்பள்ளம் அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம் மாா்ச் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இக் கோயிலில் ஆண்டுதோறும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டுக்கான விழா திங்கள்கிழமை (பிப். 28) யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. 108 கலசங்களில் ஆவாஹணம், ஜெபம், மகா பூா்ணாஹுதி நடைபெறுகிறது. தொடா்ந்து பெருமாளுக்கு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை, அா்ச்சனை நடைபெற உள்ளது. இரவு பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வருகிறாா்.

மாா்ச் 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு ருக்மணி சத்யபாமா சமேத நவநீதகிருஷ்ணனுக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

SCROLL FOR NEXT