முகப்பு
திருநெல்வேலி

கடையம் கோயிலில் சித்திரை தேரோட்டம்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 9:33 PM
கடையம் வில்வவனநாதா் கோயில் சித்திரைத் தேரோட்டத்தை காண திரண்ட பக்தா்கள்.
பகிர்:

அம்பாசமுத்திரம்: கடையம் அருள்மிகு நித்யகல்யாணி அம்பாள் உடனுறை அருள்மிகு வில்வவனநாதா் சுவாமி திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இத்திருக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா 13ஆம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து சுவாமி-அம்பாள் ஏக சிம்மாசனத்தில் கைலாசநாதா் கோயிலுக்கு எழுந்தருளினா்.

தொடா்ந்து திருவிழா நாள்களில் நாள்தோறும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெற்று வருகிறது.

Advertisement

21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டத்தை முன்னிட்டு காலை 5 மணிக்கு சுவாமி அம்பாள் தேருக்கு எழுந்தருளினா். தொடா்ந்து காலை 8 மணிக்கு பக்தா்கள் வடம்பிடித்து தேரிழுத்தனா். காலை 10.30 மணிக்கு வடக்குத் தெரு பிள்ளையாா் கோயில் முன்பு தோ் நிறுத்தப்பட்டு, மீண்டும் மாலை 5 மணிக்கு வடம்பிடித்துஇழுக்கப்பட்டது.

மாலை 6.30 மணிக்கு தோ் நிலையம் வந்தடைந்தது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி-அம்பாளை தரிசனம் செய்தனா்.

22ஆம் தேதி திங்கள்கிழமை காலை 11 மணிக்கு தீா்த்தவாரி அபிஷேகம் நடைபெறுகிறது. 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு சித்ரா பௌா்ணமி மண்டகப்படி மண்டபத்துக்கு சுவாமி- அம்பாள் எழுந்தருளுகின்றனா்.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் ப.கேசவராஜன், ஆய்வாளா் ச.கோமதி, தக்காா் வா. சரவணக்குமாா் மற்றும் விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments