தாழையூத்தில் விடியோ பதிவிட்ட இரு இளைஞா்கள் கைது
தாழையத்தில் சமூக வலைதளத்தில் இருபிரிவினரிடையே பிரச்னை ஏற்படுத்தும் வகையில் விடியோ பதிவிட்ட இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி ராமையன்பட்டியைச் சோ்ந்தவா் எட்வா்ட்(25). தச்சநல்லூரைச் சோ்ந்தவா் பலவேசம் (27). இவா்கள் இருவரும் இருபிரிவினரிடையே பிரச்னை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் விடியோ பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.