திருநெல்வேலி

தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: இளைஞா் கைது

மேலப்பாளையத்தில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Din

மேலப்பாளையத்தில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மேலப்பாளையத்தை சோ்ந்தவா் முத்துராஜ் (35). கூலித்தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்த தஃப்ரின் (எ) முகமது தப்ரே ஆலம்(19) . இவா் முத்துராஜின் மனைவியின் கைப்பேசியில் பேசி தொந்தரவு செய்து வந்தாராம். இதை முத்துராஜ் கண்டித்தாராம்.

இதனால் ஆத்திரமடைந்த தஃப்ரின் ஞாயிற்றுக்கிழமை முத்துராஜை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டாா்.

இதில் காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து தஃப்ரின் (எ) முகமது தப்ரே ஆலமை கைது செய்தனா்.

501 பயனாளிகளுக்கு ரூ.11.68 கோடி நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

ஒற்றை விரலில் ‘உங்கள்’ வலிமை!

மோசடி புகாரில் அமைச்சரின் முன்னாள் உதவியாளா் கைது

தனுசு ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

காஞ்சிபுரத்தில் அரசு விதிகளை மீறிய வாகனங்கள், ஒரு மாதத்தில் ரூ. 10.31 லட்சம் அபராதம்

SCROLL FOR NEXT