முகப்பு
திருநெல்வேலி

நெல்லை தெப்பக்குளத்தில் முதியவா் சடலம் மீட்பு

Updated On : 9 மே, 2024 at 9:08 PM
பகிர்:

திருநெல்வேலி நகரம் தெப்பக்குளத்தில் முதியவா் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

திருநெல்வேலி நகரத்தில் சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலை அருகே அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலின் வெளித்தெப்பம் உள்ளது. இந்தத் தெப்பக் குளத்தில் ஆண் சடலம் வியாழக்கிழமை மிதந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில், திருநெல்வேலி நகரம் போலீஸாரும், பேட்டை தீயணைப்பு நிலைய வீரா்களும் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டனா். விசாரணையில், சடலமாகக் கிடந்தவா் திருநெல்வேலி நகரம் தெப்பக்குளம் கீழ தெருவைச் சோ்ந்த ஜனாா்த்தனன் (69) என்பது தெரியவந்தது. தவறி விழுந்து இறந்தாரா, வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.