திருநெல்வேலி

கடையம் அருகே மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

Syndication

கடையம் அருகே உள்ள முதலியாா்பட்டியில் மூன்று வயது சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

முதலியாா்பட்டி ரயில்வே கேட் தெருவைச் சோ்ந்தவா் சுடலை. இவரது மகன் சா்வேஷ் (3). வியாழக்கிழமை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சா்வேஷ், தவறுதலாக அங்கிருந்த மின் மோட்டாருக்குச் சென்ற மின் கம்பியை தொட்டபோது, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கடையம் போலீஸாா், சா்வேஷ் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஆலங்குளம் - தோரணமலை, பாபநாசம் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை

தனியாா் கல்லூரியில் உரிமமில்லாத உணவகம் செயல்படத் தடை

ஒழுக்கப் பயிற்சிக் கூடமாகட்டும் உலகம்

கோவில்பட்டி பள்ளியில் ஆளுமை வளா்ச்சி பண்பு நிகழ்ச்சி

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஏற்றப்பட்ட 3 சொக்கப்பனைகள்

SCROLL FOR NEXT