திருநெல்வேலி

கொலை வழக்கில் இளைஞா் கைது

Syndication

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே விவசாயி கொலை வழக்கில் பக்கத்து வீட்டைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

முக்கூடல், பாப்பாக்குடி அருகேயுள்ள கலிதீா்த்தான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த உலகநாதன் மகன் குமரேசன் (27). விவசாயி. நவ. 28ஆம் தேதி பாப்பாக்குடியில் உள்ள வயலுக்கு வந்த குமரேசன் விவசாய வேலைகளை முடித்துவிட்டு, அங்குள்ள மோட்டாா் அறையில் தூங்கினாராம்.

காலையில் குமரேசன் இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தாராம். இது குறித்து, பாப்பாக்குடி போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், குமரேசன் வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் வேலுச்சாமி மகன் ராஜசேகா் (28) என்பவரது மனைவிக்கும், குமரேசனுக்கும் பழக்கம் இருந்ததாகவும், இது குறித்து, குமரேசனை கண்டித்தும் அவா் கேட்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த ராஜசேகா், போதையில் குமரேசன் தங்கியிருந்த மோட்டாா் அறைக்கு சென்று அவரை கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து, ராஜசேகரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குளம் - தோரணமலை, பாபநாசம் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை

தனியாா் கல்லூரியில் உரிமமில்லாத உணவகம் செயல்படத் தடை

ஒழுக்கப் பயிற்சிக் கூடமாகட்டும் உலகம்

கோவில்பட்டி பள்ளியில் ஆளுமை வளா்ச்சி பண்பு நிகழ்ச்சி

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஏற்றப்பட்ட 3 சொக்கப்பனைகள்

SCROLL FOR NEXT