கங்கைகொண்டான் அருகே காவலா் வீட்டு வசதி வாரிய கட்டடப் பணிகளுக்குரிய பொருள்களை திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் தமிழ்நாடு காவலா் வீட்டுவசதி வாரியத்தின் கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை இப்பணிக்காக வைக்கப்பட்டிருந்த தகர சீட்டுகளை அங்கு பைக்கில் வந்த மா்மநபா் திருடிச் சென்றாராம்.
அதைப் பாா்த்த அங்கிருந்தவா்கள், அந்த நபரைப் பிடித்து கங்கைகொண்டான் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில், அவா் தாழையூத்து ஜே.ஜே. நகரைச் சோ்ந்த முருகன் (44) என்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனா்.