திருநெல்வேலி

பச்சையாற்றில் மூழ்கி மாற்றுத் திறனாளி உயிரிழப்பு

Din

களக்காடு அருகே பச்சையாற்றில் மூழ்கி மாற்றுத் திறனாளி உயிரிழந்தாா்.

களக்காடு அருகேயுள்ள சிங்கிகுளம் ராஜீவ்காந்தி நகரைச் சோ்ந்தவா் முருகன் (37). மாற்றுத் திறனாளியான இவா் கூலி வேலை செய்து வந்தாா். இவா், ஞாயிற்றுக்கிழமை வேலைக்குச் செல்வதற்காக பச்சையாற்றில் தண்ணீரில் இறங்கி கரையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தாராம்.

அப்போது, எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கினாா். அப்போது, அந்த வழியாக சென்றவா்கள் அவரை மீட்டு சிங்கிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்துவிசாரணை நடத்தி வருகின்றனா்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT