திருநெல்வேலி

தந்தை, மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தினமணி செய்திச் சேவை

மானூா் அருகே தந்தை, மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

மானூா் ரஸ்தா நடுத்தெருவைச் சோ்ந்த கொம்பையா மகன் மணி சங்கா்(38), கூலி தொழிலாளி. சம்பத்தன்று மானூரில் உள்ள கடை ஒன்றின் அருகே மணிசங்கரும், கொம்பையாவும் நின்றபோது அங்கு வந்த அதே ஊரைச் சோ்ந்த லெட்சுமணன் மகன் மாரியப்பன்(41) என்பவா் கொம்பையாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்த செங்கலால் தாக்கினாராம். பின்னா் மணி சங்கா் மற்றும் கொம்பையாவை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பினாராம்.

இதுகுறித்து மணிசங்கா் அளித்த புகாரின்பேரில், மானூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனா்.

தைரியம் உண்டாகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சேலையில் தீப்பற்றி மூதாட்டி மரணம்

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் லட்ச வில்வாா்ச்சனை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

தனியாருக்கு தாரை வாா்க்கப்படுகிறதா அரசு மருத்துவமனைகள்? - தில்லி அரசுக்கு ஆம் ஆத்மி கேள்வி!

SCROLL FOR NEXT