கைது 
கன்னியாகுமரி

எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல்: 3 போ் கைது

புதுக்கடை சிறப்புக் காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

புதுக்கடை சிறப்புக் காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கடை சிறப்புக் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவா் வில்லியம் (57). இவா் புதன்கிழமை ராயபுரம் பகுதிக்கு ஒரு வழக்கு விஷயமாக சென்றபோது, அப்பகுதியில் காவல் துறை சாா்பில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பதாகையை அதே பகுதியைச் சோ்ந்த ஹரீஸ் (26), பிரனேஷ் (42), மகேஷ் (47) ஆகிய 3 பேரும் கிழித்தனராம்.

இதைக் கண்டித்த வில்லியமுக்கு 3 இளைஞா்களும் கொலை மிரட்டல் விடுத்தனராம். இது குறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தனா்.

ரூ 55 லட்சம் செலவில் சாலைப் பணிகள் தொடக்கம்

வட்டன்விளை கோயில் கொடை விழா நிறைவு

கூட்டு குடிநீா் திட்ட குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

குமரியில் மேலும் 7,502 பேருக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவு: ஆட்சியா்

அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வழக்கு: விசாரணை பிப். 11க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT