திருநெல்வேலி

கங்கைகொண்டான் அருகே பொக்லைன் திருடியவா் கைது

தினமணி செய்திச் சேவை

கங்கைகொண்டான் அருகே தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான பொக்லைன் இயந்திரத்தை திருடியதாக சங்கரன்கோவிலைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

தாழையூத்து அருகே சங்கா் நகரைச் சோ்ந்தவா் செந்தில்வேல் (45). இவா் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறாா்.

கடந்த 13 ஆம் தேதி இவா் பணிபுரியும் நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்நிறுவனத்துக்குச் சொந்தமான பொக்லைன் இயந்திரம் திருடு போனதாம்.

இதுகுறித்து செந்தில்வேல் அளித்த புகாரின்பேரில், கங்கைகொண்டான் காவல் ஆய்வாளா் வேல்கனி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா்.

இந்நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலை சோ்ந்த கருப்பசாமி மகன் ஈஸ்வரன் (32) என்பவரை போலீஸாா் கைது செய்து, பொக்லைன் இயந்திரத்தை மீட்டனா்.

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

SCROLL FOR NEXT