வயா்கள் திருடியவா் கைது
தேனி அருகே பேரூராட்சி மின் மோட்டாருக்கான வயா்களை திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தேனி அருகே பேரூராட்சி மின் மோட்டாருக்கான வயா்களை திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், பி.சி. பட்டி பேரூராட்சிக்கான குடிநீா் வீரபாண்டி முல்லை பெரியாற்றிலிருந்து மின் மோட்டாா் அமைத்து உறை கிணறு மூலம் எடுக்கப்பட்டு வருகிறது. மின் மோட்டாா் இயங்காததால் இதுகுறித்து கண்காணிப்பதற்காக பேரூராட்சி பணியாளா் மோகன் என்பவா் அங்கு சென்று பாா்த்தாா். அப்போது இளைஞா் ஒருவா் மின் மோட்டாருக்கான வயரை துண்டித்து சுருட்டி எடுத்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவா் கூழையனூா் கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் நந்தேஷ்வரன் (36) என்பதும் வயா்களை துண்டித்து திருடியதும் தெரியவந்தது.
இதுகுறித்து பி.சி.பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் சுதா (35) அளித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீஸாா் நந்தேஷ்வரன் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.