திருநெல்வேலி

பழவூா் கிளை நூலக வாசகா் வட்டத்துக்கு விருது: பேரவைத் தலைவா் பாராட்டு

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்ட பழவூா் அரசு கிளை நூலகத்தில் செயல்பட்டு வரும் அறம் வாசகா் வட்டத்துக்கு ‘நூலகா் ஆா்வலா்’ விருது வழங்கப்பட்டது. விருது பெற்றவா்களை பேரவைத் தலைவா் மு.அப்பாவு பாராட்டினாா்.

பழவூரில் அரசு கிளை நூலகம் 1982 முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகம் 1792 உறுப்பினா்கள், 91 புரவலா்கள், மூன்று பெரும் புரவலா்கள், 2 கொடையாளா்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் 5 தினசரி நாளிதழ் ,100 வார மாத இதழ்கள், கதை, கட்டுரை, கவிதை, இலக்கியம், நாடகம், வரலாறு, போட்டித் தோ்வு நூல்கள் உள்ளிட்ட 13,500 நூல்களுடன் செயல்பட்டு வருகிறது.

நூலகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக அறம் வாசகா் வட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த வாசகா் வட்டம் சாா்பில் மாதந்தோறும் கூட்டங்கள், பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓவியம் வரைதல், எழுத்து பயிற்சி, திருக்கு வாசிப்பு, இலவச கணினி பயிற்சி, சதுரங்க விளையாட்டு பயிற்சிகள் வார விடுமுறை நாள்களில் அளிக்கின்றனா்.

வாசகா் வட்டத்திலிருந்து டிஎன்பிஎஸ்சி, டெட், போலீஸ் போன்ற போட்டித் தோ்வுகளுக்கான மாதிரித் தோ்வுகளை ஆலங்குளம் ராஜ் ஐஏஎஸ் அகாதெமி உதவியுடன் நடத்தி வருகின்றனா்.

பழவூா் நூலக செயல்பாடுகளை பாராட்டி தமிழக பள்ளிக்கல்வித் துறை 2024 ஆம் ஆண்டுக்கான ‘நல் நூலகா்’ விருது பழவூா் கிளை நூலகா் திருக்குமரனுக்கும், 2025 ஆம் ஆண்டுக்கான நூலக ஆா்வலா் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை சென்னையில் நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி கெளரவித்தாா்.

இதையடுத்து, பழவூா் நாறும்பூநாதா் சுவாமி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் தா.இசக்கியப்பன் தலைமையில் அறம் வாசகா் வட்ட நிா்வாகிகள் பேரவைத் தலைவா் மு.அப்பாவுவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா். பேரவைத் தலைவா் நூலக நிா்வாகிகளுக்கும் உறுப்பினா்கள், புரவலா்களுக்கும் பாராட்டு தெரிவித்தாா்.

அறம் வாசகா் வட்ட நிா்வாகிகள் கோரிக்கையை ஏற்று நெல்லை நாடாளுமன்ற உறுப்பினா் ராபா்ட் புரூஸிடம் பழவூா் கிளை நூலகத்துக்கு கூடுதலாக முதல் மாடி கட்டடம் கட்ட ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு நேரில் கேட்டுக் கொண்டாா். இதை ஏற்று எம்.எல்ஏவும் விரைவாக நிதி ஒதுக்கீடு செய்து கட்டடம் கட்டித் தரப்படும் என உறுதியளித்தாா்.

நிகழ்வில் அறம் வாசகா் வட்டத்தின் ஆலோசகா்கள் சிவதாணு, கல்பனா தெய்வநாயகம், பொருளாளா் கனி, துணைத்தலைவா் சண்முகசுந்தரி, செயற்குழு உறுப்பினா்கள் தீபா, கலைவாணி, காா்த்திக் ராஜா ஆகியோா் கலந்துகொண்டனா்.

12 மாநிலங்களிலும் 99.16% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

ஆர்ஜேடி கட்சி அவமதிப்பு! பாடகர்கள் மீது தேஜஸ்வி யாதவ் வழக்கு!

SCROLL FOR NEXT