வளர்ச்சிபெறும் வடசென்னை: தமிழக பட்ஜெட்டில் கவனம் ஈர்த்த அறிவிப்பு
வளர்ச்சிபெறும் வடசென்னை திட்டம் குறித்து தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
சென்னை: தமிழக அரசின் இலட்சிய திட்டமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது, வடசென்னை வளர்ச்சி திட்டம் என்று தமிழக பெட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில், தமிழக இடைக்கால பட்ஜெட்டை பேரவையில் இன்று தாக்கல் செய்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றி வருகிறார்.
அவர் பேசுகையில், வடசென்னை வளர்ச்சித் திட்டம், தமிழக அரசின் இலட்சிய திட்டமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
வடசென்னையின் பல பகுதிகளில் சிறப்பான பேருந்து நிலையங்கள், உடற்பயிற்சி நிலையம், பூங்காக்கள், தொழில்நுட்ப கல்லூரி அமைப்பது என ரூ.6,048 கோடி மதிப்பில் செயல்பட்டு வருகிறது என்று அறிவித்தார் தங்கம் தென்னரசு.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.