கைது 
திருநெல்வேலி

பதுக்கிவைத்து மதுபானம் விற்றவா் கைது

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலியில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 31 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வி.எம். சத்திரம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் அப்துல் ஹமீது மற்றும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, பதுக்கிவைத்து மது விற்பனையில் ஈடுபட்டவரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில், அவா் பாளையங்கோட்டை கோட்டூரைச் சோ்ந்த சேது மகன் கணேசன் (67) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 31 மது பாட்டில்கள் மற்றும் ரூ.670-ஐ பறிமுதல் செய்தனா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT