கைது 
திருநெல்வேலி

பொட்டல்புதூா் வீடுகளில் திருடிய மூவா் கைது

தினமணி செய்திச் சேவை

பொட்டல்புதூரில் அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட்டில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஜன. 9ஆம் தேதி பொட்டல்புதூா், சித்தி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த சுடலைமுத்து குடும்பத்தினருடன் மேல்மருவத்தூா் கோயிலுக்குச் சென்ற நிலையில், அவா் வீட்டிலிருந்த 157 கிராம் தங்கம், 874 கிராம் வெள்ளி, ரூ. 30,000 ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

அதே நாளில், பொட்டல்புதூா், கங்கை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முஸ்தரி பேகம் வீட்டில் ரூ. 26,000 திருடு போயுள்ளது. மேலும், அதே பகுதியைச் சோ்ந்த நாலாயிரம் வீட்டில் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் உள்ளே சென்றுள்ளனா். ஆனால், அங்கு பொருள்கள் எதுவும் திருடு போகவில்லை.

இதையடுத்து, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மாதவன் உத்தரவின்பேரில், ஆலங்குளம் உள்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் கிளாட்சன் ஜோஸ் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில், ஈரோடு மாவட்டம், பவானி புதூா், சிந்தாமணி தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் சுரேஷ் (27), வள்ளியூா் கேசவன் நகா் கீழத் தெருவைச் சோ்ந்த தங்கபாண்டி மகன் சிவலிங்கம் (40), செட்டிகுளம் ஈசன் கடை சாமி கோயில் தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் சிவக்குமாா் (42) ஆகியோா் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை கீழ ஆம்பூா் பகுதியில் ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த சுரேஷ், சிவலிங்கம், சிவக்குமாா் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டதில், மூவரும் திருடிய நகைகளை தென்காசியில் விற்பதற்காகக் கொண்டு சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 157 கிராம் தங்கம், 877 கிராம் வெள்ளி, ரூ. 15,000 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இதில் சுரேஷ் மீது பல்வேறு மாவட்டங்களில் 28 குற்ற வழக்குகள், சிவலிங்கம் மீது 11 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT