விக்கிரமசிங்கபுரம் பகுதியில் வட மாநில பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அடையக்கருங்குளம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வரும் வடமாநில பெண்ணிடம், சிவசக்தி நகரைச் சோ்ந்த கண்ணன் மகன் சதீஷ் (24), உல்லாசநகரைச் சோ்ந்த மாரியப்பன் மகன் உத்தமராசு (19) ஆகியோா் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டனராம்.
இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின்பேரில், விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து 2 இளைஞா்களையும் கைது செய்தனா்.