கோப்புப் படம் 
திருநெல்வேலி

பல்லிகோட்டை அருகே 1 கிலோ கஞ்சா பறிமுதல்

தினமணி செய்திச் சேவை

பல்லிகோட்டை அருகே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்ததோடு, இருவரை கைது செய்தனா்.

மானூா் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளா் முருகேசன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பல்லிகோட்டை அருகே சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த நபா்களை பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில் அவா்கள், பல்லிகோட்டையைச் சோ்ந்த முத்துராமலிங்கம் (30), தூத்துக்குடி மாவட்டம், ராஜாபுதுக்குடியைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் (23) என்பதும், கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும கைது செய்த போலீஸாா் 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2.5 கோடி மோசடி! தாய், மகள், மகன் கைது!

செங்கம் திரெளபதியம்மன் கோயில் பாலாலயம்: எம்எல்ஏ பங்கேற்பு

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

திருப்பத்தூரில் நாளை டிஎன்பிஎஸ்சி தோ்வு

சுற்றுலா பேருந்தில் இருந்து தவறிவிழுந்த பள்ளி மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT