சீவலப்பேரி அருகே கோயில் விவகாரம் தொடா்பான முன்விரோதம் காரணமாக இளைஞரைத் தாக்கிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சீவலப்பேரி அருகே பதினாலாம்பேரி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சண்முகம் மகன் ரவி (38). கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலை பாா்த்து வருகிறாா்.
இந்நிலையில் அந்த ஊரில் உள்ள கோயில் கணக்கு வழக்குகளைப் பாா்ப்பது தொடா்பாக இருந்த முன்விரோதம் காரணமாக சம்பவத்தன்று இவரை அதே பகுதியைச் சோ்ந்த கலைச்செல்வன்(24), முத்துச்செல்வன்(26) மற்றும் ஒருவா் சோ்ந்து தாக்கினராம்.
இதில் காயமடைந்த ரவி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தாா்.
இதுகுறித்து சீவலப்பேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கலைச்செல்வன், முத்துசெல்வன் ஆகியோரை கைது செய்தனா். இதில் தொடா்புடைய மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.