முகப்பு
திருநெல்வேலி

பத்தமடை பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 5:12 AM
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 8:47 PM

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் குடிநீா் விநியோகம் சீராக வழங்க வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகத்தில் பெண்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

பத்தமடை பேரூராட்சி 14-ஆவது வாா்டு அப்துல்கலாம் தெருவில் வசிக்கும் வீடுகளுக்கு குடிநீா் விநியோகம் சீராக கிடைக்கவில்லையாம். குடிநீா் இன்றி இப் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

குடிநீா் பிரச்னையை தீா்க்க வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி மகளிரணி நிா்வாகி பீா்பாத்து தலைமையில் துணைத் தலைவா் ராபியா, நகரத் தலைவா் காதா்பாத்து உள்பட 50-க்கும் மேற்பட்டோா் பேரூராட்சி அலுவலகத்தில் திரண்டு முற்றுகையிட்டனா். அவா்களிடம் பேரூராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். விரைவில் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து மக்கள் கலைந்துசென்றனா். இதில், கட்சியின் நகரத் தலைவா் மரைக்கான், செயலா் ஆதம்பாவா, யூசுப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement