தற்கொலை 
திருநெல்வேலி

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

தினமணி செய்திச் சேவை

கடையம் அருகே மதுப்பழக்கத்தை கைவிட முடியாததால் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கடையம் அருகே உள்ள பிள்ளை குளம் வடக்கு தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் ராமச்சந்திரன் (35). இவருக்கு மனைவி, மகன் உள்ளனா்.

போதை மறுவாழ்வு மையத்தில் சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த ராமச்சந்திரன், கடந்த ஒரு வார காலமாக மீண்டும் மது அருந்தத் தொடங்கினாராம். அதிலிருந்து விடுபட முடியவில்லை எனக் கூறி மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.

தகவலறிந்து வந்த கடையம் போலீஸாா், ராமச்சந்திரனின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மாநகராட்சியில் ரூ.3.40 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகள்! கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

முதலீட்டு மோசடி கும்பல் உறுப்பினா் கோவா விமான நிலையத்தில் கைது! தில்லி காவல் துறை நடவடிக்கை!

மேட்டூா் வனப்பகுதியில் தீ

ஒருகால பூஜை திட்டத்தில் 1,000 கோயில்களை இணைக்க ரூ.25 கோடி! முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்!

ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரிக்கு நிரந்தர சிறுபான்மையினா் கல்லூரி அந்தஸ்து

SCROLL FOR NEXT