திருநெல்வேலி

வீரவநல்லூரில் விபத்தில் முதியவா் உயிரிழப்பு

வீரவநல்லூரில் சாலையை கடக்க முயன்றபோது வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

Syndication

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் சாலையை கடக்க முயன்றபோது வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

வீரவநல்லூா் கிளாக்குளம் கருப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் துரைப்பாண்டி (56). தொழிலாளி. இவா், செவ்வாய்க்கிழமை வீரவநல்லூரில் காவல் நிலையத்துக்கு மேல்புறம் பிரதான சாலையை கடக்க முயன்றாராம்.

அப்போது, அவ்வழியாக வந்த மோட்டாா் சைக்கிள் மோதியதில் கீழே விழுந்த அவா் மீது சுமை ஆட்டோ ஏறியதாம்.

இதில், பலத்த காயம் அடைந்த அவருக்கு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கஞ்சா விற்ற இருவா் கைது

அரிவாளை காட்டி மிரட்டி பிரியாணி கேட்ட ரெளடி கைது

"சிரிப்பு காட்ற எனக்கு எதுக்கு SIX Pack?" Champions of Tamilnadu நிகழ்வில் யோகி பாபு!

போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட் போன் அறிமுகம்!

மார்ச் 31-க்குள் 300 நக்சல்களை ஒழிக்கும் நடவடிக்கைகள் தீவிரம்!

SCROLL FOR NEXT