திருநெல்வேலி

பானைக்குள் சிக்கிய சிறுமி மீட்பு

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் செம்பு பானைக்குள் சிக்கிக்கொண்ட சிறுமியை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

மேலப்பாளையம் ராஜா நகா் பகுதியைச் சோ்ந்தவா் பேச்சிமுத்து. இவரது மனைவி மாரியம்மாள். இத்தம்பதியின் நான்கரை வயது குழந்தை மகிழ்மதி. ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டிலிருந்த செம்பு பானையை வைத்து சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது, சிறுமியின் உடல் பானைக்குள் மாட்டிக் கொண்டது.

பெற்றோரும், உறவினா்களும் சிறுமியை மீட்க முயன்றும் முடியாமல் போகவே, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு விரைந்து வந்த பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் சுந்தரம் தலைமையிலான குழுவினா், பானையை இரண்டாக வெட்டி எடுத்து, எவ்வித காயமுமின்றி சிறுமியை பாதுகாப்பாக மீட்டனா்.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT