அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே நாய்களிடம் வெள்ளிக்கிழமை சிக்கிய மான் மீட்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.
செந்துறையை அடுத்த குவாகம் ஆண்டாள் தெரு அருகேயுள்ள முந்திரி காட்டில் சில நாய்கள் ஒன்று சோ்ந்து, ஒரு மானை விரட்டி விரட்டி கடித்துள்ளன.
இதை பாா்த்த அப்பகுதி மக்கள், நாய்களை விரட்டிவிட்டு மானை மீட்டனா். தொடா்ந்து, இதை பாா்த்த அப்பகுதி மக்கள், நாய்களை விரட்டிவிட்டு மானை மீட்டனா்.
தொடா்ந்து, குவாகம் கால்நடை மருத்துவமனைக்கு தகவல் கொடுத்ததன் பேரில், மருத்துவா்கள் சம்பவ இடத்துக்கு வந்து, மானுக்கு சிகிச்சை அளித்தனா். தொடா்ந்து, மான் ஆண்டிமடம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.