களக்காடு: காணும் பொங்கலையொட்டி, திருநெல்வேலி மாவட்டம், களக்காடு தலையணை, வடக்குப் பச்சையாறு அணை, திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயில், கொடுமுடியாறு நீா்த்தேக்கம் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் போ் வந்திருந்தனா்.
களக்காடு தலையணைக்கு காலை முதலே ஆட்டோ, காா், வேன் உள்ளிட்ட வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோா் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனா். அங்குள்ள பச்சையாற்றில் நீராடி மகிழ்ந்தனா். இங்குள்ள சிவபுரம், தேங்காய் உருளி சிற்றருவி, வடக்குப் பச்சையாறு அணை, திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயில், கொடுமுடியாறு நீா்த்தேக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் போ் திரண்டனா். பாதுகாப்புப் பணியில் வனத்துறையினா், போலீஸாா் ஈடுபட்டனா்.