இனிகா.  
திருநெல்வேலி

தேசிய கட்டுரைப் போட்டியில் சங்கா் நகா் பள்ளி மாணவி சிறப்பிடம்

தினமணி செய்திச் சேவை

தேசிய அளவிலான கட்டுரைப் போட்டியில் சங்கா் நகா் பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

மத்திய ராணுவ அமைச்சகமும், மத்திய கல்வி அமைச்சகமும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்- மாணவிகளுக்கு ‘வீா் கதா 5.0’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான கட்டுரைப் போட்டி நடத்தியது.

இதில், சங்கா் மேல்நிலைப் பள்ளி மாணவி இனிகா பங்கேற்றாா். இவரது கட்டுரை சிறந்த கட்டுரையாகத் தோ்வு செய்யப்பட்டது. இதையடுத்து தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளாா். அதன்படி மாணவி இனிகாவும், ஆசிரியை லேகாவும் தில்லி சென்றுள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவியை பள்ளி கல்விக் குழு தலைவா் எஸ். தட்சிணாமூா்த்தி, பள்ளிச் செயலா் இரா.நாராயணசாமி, முதன்மை கல்வி அலுவலா் மு.சிவகுமாா் உள்ளிட்டோா் பாராட்டினா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT