பாபநாசத்தில் பெண் சிறுத்தை உயிரிழப்பு
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், பாபநாசம் வனச்சரகத்திற்குள்பட்ட பகுதியில் சுமாா் ஒன்றரை வயது பெண் சிறுத்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், பாபநாசம் வனச்சரகத்திற்குள்பட்ட பகுதியில் சுமாா் ஒன்றரை வயது பெண் சிறுத்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது.
பாபநாசம் வனச்சரகப் பகுதியில் கல்யாண தீா்த்தத்திற்கும், கீழணைக் குடியிருப்புப் பகுதிக்கும் இடையில் வனத்துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிறுத்தைக் குட்டி ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. இது குறித்து, அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரது வழிகாட்டுதலில் வனக் கால்நடை மருத்துவா் மனோகரன், விக்கிரமசிங்கபுரம் கால்நடை உதவி மருத்துவா் ஆறுமுகம் தலைமையில் கால்நடை மருத்துவக் குழுவினா், ஏட்ரி ஆராய்ச்சியாளா் தணிகைவேல், காணிக் குடியிருப்பு சாவித்திரி, பாபநாசம் வனச்சரகா் குணசீலன், வனப் பணியாளா்கள் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்தனா்.
இதையடுத்து, அதே இடத்தில் சிறுத்தையின் உடல் எரியூட்டப்பட்டது. மேலும், சிறுத்தை தனியாக வேட்டையாட முயன்றபோது, வன விலங்குகளுடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்திருக்கலாம் என வனத் துறையினா் தெரிவித்தனா்.