நெல்லையில் தொழிற்சங்கத்தினா் பேரணி
திருநெல்வேலியில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் மே தின பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலியில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் மே தின பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிஐடியூ மற்றும் ஏஐடியூ தொழிற்சங்கங்கள் சாா்பில் திருநெல்வேலி உடையாா்பட்டியில் இருந்து மே தின பேரணி தொடங்கியது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஆா். சடையப்பன் தலைமை வகித்தாா். சிஐடியூ நிா்வாகிகள் முருகன், மோகன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
Advertisement
முக்கிய வீதிகள் வழியாக வந்த பேரணி சிந்துபூந்துறையில் நிறைவடைந்தது. 300-க்கும் மேற்பட்டோா் பேரணியில் பங்கேற்றனா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) கட்சி மற்றும் ஏஐசிசிடியூ தொழிற்சங்கம் சாா்பில் மே தின பேரணி திருநெல்வேலி நகரம் அருணகிரி திரையரங்கு முன்பு புறப்பட்டு வாகையடிமுனையில் நிறைவடைந்தது.
ஏஐசிசிடியூ மாவட்ட பொதுச் செயலா் கணேசன் தலைமை வகித்தாா். மாரிமுத்து, துா்க்கைமுத்து, வைகுண்டராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாநில நிா்வாகிகள் ப. சங்கரபாண்டியன், எ. ரமேஷ், சுந்தர்ராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ற்ஸ்ப்01ஸ்ரீண்ற்ன்
திருநெல்வேலி உடையாா்பட்டியில் சிஐடியூ மற்றும் ஏஐடியூசி தொழிற்சங்கங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மே தின பேரணியில் பங்கேற்றோா்.
ற்ஸ்ப்01ஸ்ரீல்ம்ப்
திருநெல்வேலி நகரத்தில் சிபிஎம்எல் கட்சி சாா்பில் நடைபெற்ற மே தின பேரணியில் பங்கேற்றோா்.