முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் மே தின பேரணி, கொடியேற்றம்

கும்பகோணம் மணிக்கூண்டு பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மே தின கொடியேற்றம்.

Updated On : 2 மே, 2026 at 2:19 AM
கும்பகோணம் மணிக்கூண்டு பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மே தின கொடியேற்றம்.
பகிர்:

கும்பகோணத்தில் ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில் மே தின பேரணி, கொடியேற்றும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட இந்திய கம்யூ., ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில் மகாமக குளத்தில் நடைபெற்ற கொடியேற்று விழாவிற்கு ஏஐடியுசி மாநிலச் செயலா் தில்லைவனம் தலைமை வகித்தாா். இந்திய கம்யூ. மாவட்டச்செயலா் வழக்குரைஞா் மு.அ. பாரதி கொடியேற்றினாா். அப்போது தொழிலாளா் தின உறுதியேற்றனா். முன்னதாக தொழிற்சங்கத்தினா் செஞ்சட்டை அணிந்த இருசக்கர வாகனப் பேரணி தாராசுரம் காய்கனி சந்தையில் தொடங்கியது.