ஆரல்வாய்மொழியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரியில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரியில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
காவல் உதவி ஆய்வாளர் ஹரிகரன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சுப்பிரமணிய பிள்ளை முன்னிலை வகித்தார். உதவி ஆய்வாளர் முத்தையன் வரவேற்றார்.
உதவி ஆய்வாளர் கணேஷ் குமார் உள்ளிட்டோர் சாலை பாதுகாப்பு குறித்துப் பேசினர். வரலாற்று துறை பேராசிரியர் கலையரசு நன்றி கூறினார்.