கன்னியாகுமரி

6 ஓய்வூதியர்களுக்கு ரூ. 3 லட்சம் குடும்ப பாதுகாப்பு நிதி அளிப்பு

DIN

குமரி மாவட்டத்தில் 6 ஓய்வூதியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ. 3 லட்சத்துக்கான காசோலைகளை ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்ட ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்டஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டஅரங்கில் நடைபெற்றது.    கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை வகித்து ஓய்வூதியதாரர்கள் 6 பேருக்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலான காசோலைகளை குடும்ப பாதுகாப்பு நிதியாக வழங்கினார்.  தொடர்ந்து ஓய்வூதியர்களிடமிருந்து பெறப்பட்ட 80  கோரிக்கை மனுக்களில் 58  மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன.
 கூட்டத்தில்  ஓய்வூதியர் நல இயக்கத்தின் இணை இயக்குநர் மஞ்சுளா, துணை இயக்குநர் மு.மதிவாணன்ஆட்சியரின் நேர்முகஉதவியாளர்(கணக்கு) சி. செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT