கன்னியாகுமரி

வேலைவாய்ப்பு புதுப்பிக்கத் தவறிய முன்னாள் படைவீரர்களுக்கு வாய்ப்பு

DIN

வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க தவறிய முன்னாள் படைவீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
1.1.2011 முதல் 31.12.2015 வரையிலான கால அளவில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க தவறிய முன்னாள் படைவீரர்கள் தங்களது வேலைவாய்ப்பு பதிவினை உரிய பதிவு மூப்புடன் புதுப்பித்தல் செய்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே மேற்கண்ட கால வரையறையில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க தவறிய முன்னாள் படைவீரர்கள் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் உரிய வேலைவாய்ப்பு பதிவு அட்டையுடன் வேலை நாள்களில் தினசரி காலை 10 மணியிலிருந்து 12 மணிக்குள் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் ஆஜராகி புதுப்பித்து பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT