கன்னியாகுமரி

இடைக்கோட்டில் நாளை சிறப்பு மனு நீதி நாள் முகாம்

DIN

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், இடைக்கோடு வருவாய் கிராமம், இடைக்கோடு பேரூராட்சி பகுதியில் மாவட்ட ஆட்சியரின்  சிறப்பு மனுநீதித் திட்ட முகாம் வியாழக்கிழமை (டிச. 13) நடைபெறுகிறது.
கல்லுப்பாலம் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 10 மணி முதல் மதியம் 1மணிவரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில், பொதுமக்களிடமிருந்து  மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் மனுக்களைப் பெறுகிறார். இந்த மனுக்கள் மீது தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
எனவே, இடைக்கோடு பேரூராட்சி பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் கோரிக்கைகளை  மனுவாக அளித்து பயன்பெற வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT