கன்னியாகுமரி

என்.ஐ. கல்லூரியில் புகைப்படம்,  ஓவியக் கண்காட்சி

DIN

குமாரக்கோவில் என்.ஐ. கலை - அறிவியல்  கல்லூரியில்  புகைப்படம்  மற்றும் ஓவியக் கண்காட்சி திங்கள்கிழமை  நடைபெற்றது. 
கல்லூரியின் காட்சி தொடர்பியல் துறை சார்பில் நடைபெற்ற இக்கண்காட்சிக்கு கல்லூரி முதல்வர் எஸ். பெருமாள் தலைமை வகித்தார்.  துறைத் தலைவர்  சிபி.எஸ். குமார்  வரவேற்றார். அருவி திரைப்பட நடிகர்  பிரதீப் ஆன்றனி   மாணவர்களுக்கு  ஊடகங்கள் மக்கள் மத்தியில் தகவல்களை எவ்வாறெல்லாம் கொண்டு சேர்க்கிறது என்பது குறித்து விளக்கினார். தொடர்ந்து, அவர்  பல்வேறு கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற புகைபடம்  மற்றும் சிறந்த  ஓவியத்திற்கான  பரிசுகளை வழங்கினார். பேராசிரியர் பா. புஷ்பலதா நன்றி கூறினார்.
இதில், பேராசிரியர்கள்  அருண் சிதம்பரம்,  சைனி, சுபனேஷ், காட்சி தொடர்பியல் துறை  மாணவ, மாணவிகள் பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

SCROLL FOR NEXT