கிள்ளியூர் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கருங்கல் அருகேயுள்ள இனயம் சின்னத்துறையில் ரூ. 3 லட்சத்தில் மீனவர்கள் ஓய்வறைக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இனயம் சின்னத்துறையில் மீனவர்கள் தங்கி ஓய்வெடுக்க கட்டடம் கட்ட வேண்டும் என கிள்ளியூர் எம்எல்ஏவிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, நடைபெற்ற விழாவுக்கு எம்எல்ஏ ராஜேஷ்குமார் தலைமை வகித்து, அடிக்கல் நாட்டினார். இனயம் பங்கு அருள்பணியாளர் அன்பரசன் முன்னிலை வகித்தார்.
கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் டென்னிஸ், மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலர் ஜோர்தான், அருள்தாஸ், எடிசன், ஆன்றோ, டென்னிஸ். பனியடிமை உள்ளிட்ட பர் பங்கேற்றனர்.