கன்னியாகுமரி

அகஸ்தீசுவரத்தில் காங்கிரஸ் கொடிக்கம்பம் சேதம்: காவல் நிலையம் முற்றுகை

DIN

அகஸ்தீசுவரத்தில் காங்கிரஸ் கொடிக் கம்பத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் சனிக்கிழமை தென்தாமரைகுளம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அகஸ்தீசுவரம் தெற்குச் சாலையில் உள்ள காங்கிரஸ் ஆட்டோ ஓட்டுநர் சங்க கொடிக் கம்பம் தொடர்பாக இருதரப்பினரிடையே பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதி கொடிக்கம்பம் சேதப்படுத்தப்பட்டது.
இதுதொடர்பாக செந்தில்குமார் என்பவர் தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் அகஸ்தீசுவரத்தைச் சேர்ந்த சமத்துவ மக்கள் கட்சி ஒன்றியச் செயலர் ரமேஷ் மற்றும் சுயம்புலிங்கம் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர். இந்நிலையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்னன் தலைமை வகித்தார்.
இதில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாலையா, அகஸ்தீசுவரம் வட்டாரத் தலைவர் எஸ்.பி.ராஜஜெகன், மாவட்ட துணைத் தலைவர் ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT