நாகர்கோவிலில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வரு
கன்னியாகுமரி மாவட்ட பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவல சோ. இளங்கோ தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத் திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 240 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள்மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், தனித் துணை ஆட்சியர் மு. சந்திரன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.