நாகர்கோவிலில் மக்கள் குறைதீர் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், சத்தியவாணி முத்து அம்மையார் திட்டத்தின்கீழ் 30 பயனாளிகளுக்கு ரூ. 1,09,140 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே வழங்கினார். நிகழ்ச்சியில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் கோரி 275 மனுக்கள் பெறப்பட்டன.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுலவர் சோ. இளங்கோ, தனித் துணை ஆட்சியர் மு. சந்திரன், மாவட்ட சமூக நல அலுவலர் பியூலா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.