முகப்பு
கன்னியாகுமரி

பத்மநாபபுரம் பகுதி மாற்றுத் திறனாளிகளுக்கு இன்று சிறப்பு குறைதீர் கூட்டம்

பத்மநாபபுரம் வருவாய் கோட்டத்திற்குள்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே வெளியிட்டுள்ள

Updated On : 15 மே, 2018 at 12:52 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

பத்மநாபபுரம் வருவாய் கோட்டத்திற்குள்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பத்மநாபபுரம் வருவாய் கோட்டத்திற்குள்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் அனைத்து அரசு துறை அலுவலர்களும் கலந்துகொள்கிறார்கள். எனவே, கல்குளம் மற்றும் விளவங்கோடு வட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் மாதாந்திர சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.