ராஜீவ்காந்தி நினைவு நாள்: சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவிப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, நாகர்கோவிலில் அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, நாகர்கோவிலில் அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நாகர்கோவில் டதி பள்ளி சந்திப்பில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரின்ஸ் எம்எல்ஏ, முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராபர்ட்புரூஸ், நகரத் தலைவர் அலெக்ஸ், மகேஷ்லாசர், வட்டாரத் தலைவர்கள் காலபெருமாள், ராஜஜெகன், ஜெரால்டுகென்னடி, மகளிர் அணி சுசீலா, ஷகீனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.