கன்னியாகுமரி

70 கிலோ ரப்பர் சீட் திருட்டு: ஒருவர் கைது

DIN

வேளிமலை பகுதியிலுள்ள ரப்பர் தோட்ட கிடங்கிலிருந்து 70 கிலோ உலர்ந்த ரப்பர் சீட்டை திருடியதாக ஒருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். 
குலசேகரம் பாறைகாட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (56) . இவர் வேளிமலை பகுதியில் 10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து ரப்பர் பயிரிட்டு, ரப்பர் பால் எடுத்து வருகிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலையில் 70 கிலோ உலர்ந்த ரப்பர் ஷீட்டை   தோட்டத்திலுள்ள கிடங்கில் வைத்து பூட்டி விட்டு, வீட்டுக்கு சென்றுள்ளார். புதன்கிழமை ரப்பர் சீட்டை எடுக்க வந்த போது, கிடங்கின் பூட்டு உடைக்கப்பட்டு, மர்ம நபர்கள் ரப்பர் சீட்டை திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கொற்றிகோடு போலீஸார் வழக்குப் பதிந்து, குமாரபுரத்தைச் சேர்ந்த ஐயப்பனை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரூா் பாஜகவினருக்கு பாராட்டு விழா

செப்.2015 முதல் 2021 வரை எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தனித்தோ்வா்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற இறுதி வாய்ப்பு

போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது

சாத்தான்குளம் அருகே ஹோட்டல் ஊழியா் மா்ம மரணம்

தென்காசியில் மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT