கோ அஷ்டமியை முன்னிட்டு நாகர்கோவில் வடசேரி வரசக்தி விநாயகர் கோயிலில் கோ பூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், சத்தீஷ்கர் மாநிலத்தைச் சேர்ந்த முகமதுபைஸ்கான் பேசியது: பசு இனம் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். பசுவின் மூலம் கிடைக்கும் பொருள்கள் மூலம் விவசாயம் செய்தால் மனித சமுதாயம் ஆரோக்கியமாக வாழ முடியும், புற்றுநோய் உள்ளிட்ட எந்த நோயும் மனிதனை தாக்காது என்றார் அவர்.
ஏற்பாடுகளை பிருந்தாவன் கோசாலையைச் சேர்ந்த சிவதினேஷ், வடசேரி ராஜா, பாலசுந்தரம் ஆகியோர் செய்திருந்தனர். இப்பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோ பூஜை செய்தனர்.